ஈரான் வங்கி மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிதி நிறுவனங்களை தகர்க்க ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரான் வங்கி மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிதி நிறுவனங்களை தகர்க்க ஈரான் கடும் எச்சரிக்கை

தெஹ்ரானில் உள்ள ‘பேங்க் செபா’ மீதான தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தொடர்புடைய வங்கிகளை குறிவைக்கப்போவதாக அறிவித்துள்ளது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபாகரி, இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

தாக்குதல் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் இத்தகைய நிதி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 1,000 மீட்டர் தொலைவில் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *