இந்தியாவிற்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் திறக்கப்பட்டது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி

இந்தியாவிற்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் திறக்கப்பட்டது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் ஏற்பட்ட கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில் இந்தியா மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் டாங்கிகள் செல்வதற்காக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் சூழல் உருவாகியுள்ளது.

உலகின் மிக முக்கியமான இந்த கடல்வழிப்பாதை மூடப்பட்டதால் இந்தியாவின் இறக்குமதியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலைமையைக் கையாள ஈரான் தவிர ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனும் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் உள்நாட்டுச் சந்தையில் நிலவும் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும். இது சாமானிய மக்களுக்கு நிம்மதியை அளிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *