ஆர்ஜி கர் ஊழல் வழக்கில் அதிரடி! சந்தீப் கோஷ் உட்பட 3 பேர் மீது அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
February 6, 2026

ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் விற்பனையாளர்கள் பிப்லப் சின்ஹா, சுமன் ஹஸ்ரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பணமோசடி தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை வழக்கில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. அதே வேளையில், இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அக்தர் அலிக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.