மெக்சிகோவின் 50% வரிவிதிப்பு; இந்திய ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க புதுடெல்லி உறுதி

அமெரிக்காவைத் தொடர்ந்து, மெக்சிகோ இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50% வரை வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஒருதலைப்பட்சமான முடிவுக்கு இந்தியா வலுவான பதிலளித்துள்ளது. முன்னறிவிப்பின்றி ‘மிகவும் விருப்பமான தேசத்தின்’ (MFN) வரியை அதிகரிப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளுக்கோ அல்லது உலகளாவிய வர்த்தக விதிகளுக்கோ நியாயமில்லை என்று புதுடெல்லி கூறியுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவுக்கு எதிராக, இந்திய ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை இந்தியா கொண்டுள்ளது. இருதரப்பு வர்த்தக உறவில் சமநிலையைக் காக்க, மெக்சிகோவின் நிதி அமைச்சகத்துடன் இணைந்து, இருதரப்புக்கும் பயனுள்ள ஒரு தீர்வை எட்ட இந்திய வர்த்தகத் துறை முயற்சித்து வருகிறது.