பூரி கருவறையில் கேமரா! வைரலாகும் புகைப்படத்தால் ஜெகந்நாதர் கோயில் பாதுகாப்பில் பெரும் சர்ச்சை
December 20, 2025

பூரி ஜெகந்நாதர் கோயில் கருவறைப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. கடும் கட்டுப்பாடுகளையும் மீறி ‘ரத்ன சிம்மாசனம்’ புகைப்படம் எடுக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஊழியர்களின் தலையீடு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபகாலமாக இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் ஒடிசா சட்ட அமைச்சர் தண்டனையை ஏழு ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கோயில் நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.