பாகிஸ்தான் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் கலக்கத்தில் ரசிகர்கள்

பாகிஸ்தான் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் கலக்கத்தில் ரசிகர்கள்

மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னரும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அபிஷேக் சர்மா பங்கேற்பது குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோவில் அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டதோடு, தொற்று காரணமாக உடல் எடை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் வெறும் பருப்பு சாதம் மட்டுமே உட்கொண்டு வருவதால் உடல் ரீதியாக இன்னும் பலவீனமாகவே காணப்படுகிறார்.

டெல்லியில் உள்ள தனது பெற்றோருடன் அவர் இருந்தாலும், அவரது உடல்நிலை குறித்து இந்திய அணி நிர்வாகம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவ் இது குறித்து தெளிவான தகவல் அளிக்காத நிலையில், இந்த உயர் அழுத்தப் போட்டியில் ரிஸ்க் எடுக்காமல் அபிஷேக் இன்றி இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *