பள்ளி மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு
March 27, 2026

ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 175 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இது ஒரு திட்டமிட்ட படுகொலை மற்றும் மனிதநேயமற்ற குற்றம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அமெரிக்க உளவுத்துறை இந்தத் தாக்குதலுக்கு அந்த நாடுகளே காரணம் என்று குறிப்பிட்ட போதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இதைத் தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி மறுத்துள்ளன. இருப்பினும், இது தற்செயலானது அல்ல என்றும், அப்பாவிச் சிறுவர்கள் மீதான இத்தகைய கொடூரமான தாக்குதலைப் போர் நடவடிக்கையாகக் கருத முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.