பதவியை துறந்த சி வி ஆனந்த போஸ் வெளியிட்ட அதிரடி ரகசியம் விரைவில் அம்பலமாகும் உண்மை
March 9, 2026

மேற்கு வங்க ஆளுநர் பதவியை கடந்த மார்ச் 5ஆம் தேதி ராஜினாமா செய்த சி.வி. ஆனந்த போஸ், தனது முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை ரகசியமாக வைத்துள்ளார். மூன்றரை ஆண்டு கால பதவிக்காலம் தமக்கு போதுமானது என்று குறிப்பிட்ட அவர், சரியான தருணம் வரும்போது உண்மையை வெளிப்படுத்துவேன் எனத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கேரளா புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முடிவு தன்னிச்சையானது என்று விளக்கினார். ஆட்டத்தின் விதிகளை அறிந்தே தாம் விலகுவதாகக் குறிப்பிட்ட போஸின் இந்த நடவடிக்கை மம்தா பானர்ஜி அரசால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.