பட்ஜெட்டில் அதிரடி மாற்றம் பெட்ரோல் டீசல் மற்றும் மொபைல் போன் விலை குறைய வாய்ப்பு
February 1, 2026

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் உரங்களின் விலையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் விலையும் குறையக்கூடும் எனத் தெரிகிறது.
மருந்துகள் மற்றும் சூரிய சக்தி உபகரணங்கள் மீதான வரி குறைக்கப்பட்டால் அவற்றின் விலை கணிசமாகக் குறையும். இறக்குமதி வரி மற்றும் இதர வரிகளில் மாற்றம் செய்வதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இந்த அறிவிப்புகள் வெளியானால் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன் சாதாரண மக்களின் சேமிப்பும் உயரும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.