திருமணமாகி 30 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பட்டு நெசவுத் தம்பதி தற்கொலை

திருமணமாகி 30 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பட்டு நெசவுத் தம்பதி தற்கொலை

சேலம் மாவட்டம் மேச்சேரி ஓமலூரான் தெருவைச் சேர்ந்த மুরুகன் மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகிய இருவரும் தங்களது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் இவர்கள் நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

தகவலறிந்து வந்த மேச்சேரி போலீசார் தம்பதியினரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *