தவறான சைகையினால் நேர்ந்த விபரீதம் கயிறு கட்டாமல் குதித்த இளம்பெண் உயிரிழப்பு

கொலம்பியாவின் ஆன்டியோகுவியா மாகாணத்தில் தனது காதலருடன் பங்கீ ஜம்பிங் விளையாட்டில் ஈடுபடச் சென்ற 25 வயது இளம்பெண் யெசெனியா மொரேல்ஸ் கோம்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சியாளர் அவரது காதலருக்கு குதிக்கும்படி அளித்த சைகையை தனக்கானது எனத் தவறாகப் புரிந்து கொண்ட யெசெனியா, பாதுகாப்பு கயிறு இணைக்கப்படுவதற்கு முன்பே 160 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவ அறிக்கையின்படி அந்த இளம்பெண் தரையில் விழுவதற்கு முன்பே பயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு முறையான உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது பாதுகாப்பு விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவது அவசியம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் உயிர் ஒரு சிறு குழப்பத்தால் பிரிந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.