டெல்லியை பாதுகாக்கும் கவசமாக மாறுகிறது கேபிடல் டோம்
December 17, 2025

டெல்லியை வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன்களிடமிருந்து பாதுகாக்க ‘கேபிடல் டோம்’ என்ற உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த மும்முனை பாதுகாப்பு வளையம், எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே அழிக்கும் திறன் கொண்டது. வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் இந்த பாதுகாப்பு முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த அமைப்பில் உள்ள லேசர் மற்றும் ஜாமிங் தொழில்நுட்பங்கள் முக்கிய அரசு கட்டிடங்களுக்கு உயர்தர பாதுகாப்பை வழங்கும். எஸ்-400 பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் இந்த ‘கேபிடல் டோம்’, இந்தியத் தலைநகரை உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.