சோனிபட்டில் 11 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம் கர்ப்பமானதால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
December 17, 2025

ஹரியானாவின் சோனிபட்டில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது வகுப்புத் தோழனாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. ஒரு வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் வைத்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பீகாரைச் சேர்ந்தவர்கள். புகாரைத் தொடர்ந்து போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் மைனர் என்பதால் போலீசார் சட்டப்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.