கோலி மற்றும் ரோஹித் நீக்கம் தான் இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் என சோயப் அக்தர் அதிரடி

2026 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி தட்டிப்பறித்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கிளப்பியுள்ள புதிய விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் திட்டமிடலை பாராட்டிய அவர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களை அணியிலிருந்து நீக்கியது தான் இந்த வரலாற்று வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கட்டமைப்பு மற்றும் இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசிய அக்தர், சீனியர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா போன்றோருக்கு முக்கியத்துவம் கொடுத்த கம்பீரின் கொள்கையை புகழ்ந்து தள்ளினார். 2024 உலகக்கோப்பைக்கு பின் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், அணி நிர்வாகம் அடுத்த தலைமுறையை நோக்கி எடுத்த தீர்க்கமான முடிவே இந்தியாவை மீண்டும் சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.