ஏழு நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய டிரம்ப் அதிரடி தடை
December 17, 2025

ஏழு நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அதிகாரப்பூர்வ பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கடுமையான முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புர்கினா பாசோ, நைஜர், மாலி, தெற்கு சூடான் மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. ஏற்கனவே லாவோஸ் மற்றும் சியரா லியோன் போன்ற நாடுகளுக்கு இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.