சிட்னி துப்பாக்கிச் சூடு நடத்திய சாஜித் இந்தியா வந்தாரா? வெளியான அதிரடித் தகவல்
December 17, 2025

சிட்னி கடற்கரையில் தாக்குதல் நடத்திய சாஜித் அக்ரம் 1998-ல் இந்தியாவை விட்டு வெளியேறினார். கடந்த 27 ஆண்டுகளில் அவர் வெறும் ஆறு முறை மட்டுமே இந்தியாவிற்கு வந்துள்ளதாக தெலங்கானா காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்தபோது அவர் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹனுக்கா திருவிழாவில் தனது மகனுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.