எஃப் ৩৫ போர் விமானத்தையே மிஞ்சும் வகையில் ஜப்பான் உருவாக்கும் புதிய பலசாலி

சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல் தனது பாதுகாப்புப் படையை நவீனப்படுத்த ஜப்பான் தீவிரமாக இறங்கியுள்ளது. 1960 முதல் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் இருந்தாலும், சமீபகாலமாக ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் ஜப்பான் தனது சொந்த பலத்தை பெருக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிரிட்டன் மற்றும் இத்தாலியுடன் இணைந்து 2035-க்குள் ஆறாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் ‘குளோபல் காம்பாட் ஏர் புரோகிராம்’ (GCAP) திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளது.
இந்த புதிய போர் விமானம் தற்போதைய அமெரிக்க எஃப்-35 விமானங்களை விட அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் அதிநவீன சென்சார்கள், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்ஜின்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களுடன் இணைந்து செயல்படும் வசதிகள் இடம்பெறவுள்ளன. ஜப்பானின் இந்த ராணுவ நகர்வு ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கு கடும் சவாலாக அமையும் அதே வேளையில், உலக நாடுகளிடையே புதிய ஆயுதப் போட்டி குறித்த கவலையையும்