இந்தியா கைகுலுக்க மறுத்தால் பாகிஸ்தானுக்கும் விருப்பமில்லை மோக்சின் நக்வி ஆவேசம்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கைகுலுக்காத’ அணுகுமுறைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோக்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா கைகுலுக்க விரும்பவில்லை என்றால், பாகிஸ்தானுக்கும் அந்த ஆசை இல்லை என்று அவர் கூறியுள்ளார். சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் யு-19 போட்டிகளில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததை அடுத்து இந்த மோதல் வெடித்துள்ளது.
விளையாட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் தன்னிடம் இருமுறை கூறியதாக நக்வி குறிப்பிட்டார். இந்தியாவுடன் சமமான நிலையிலேயே பாகிஸ்தான் செயல்படும் என்றும், அவர்கள் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார். ஆசிய கோப்பை கோப்பையை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு மத்தியில், நக்வியின் இந்த பேச்சு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.