இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி
December 31, 2025

ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி 4-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் கடைசி போட்டியில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய வீராங்கனைகள் களம் காணுகின்றனர். மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு ஒயிட்வாஷ் அவமானத்தைத் தவிர்க்க சாமரி அதப்பத்து தலைமையிலான இலங்கை அணி போராட வேண்டியுள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் இந்தியப் பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டிற்கு முன்னால் இலங்கை பேட்டர்கள் திணறி வருகின்றனர். அதே நேரத்தில் இந்திய வீராங்கனைகள் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருவதால் இலங்கை அணி கடும் நெருக்கடியில் உள்ளது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தொடரை முழுமையாகக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.