இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திக்க சென்ற வாலிபர் எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சி
December 31, 2025

இமாச்சல பிரதேசத்தின் சுகந்த்பூர் பகுதியில் காதலியின் அழைப்பை ஏற்று 17 கிமீ பயணம் செய்து இரவு நேரத்தில் சந்திக்கச் சென்ற வாலிபர் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது காதலியின் குடும்பத்தினர் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அடிதடியில் ஈடுபடாமல் இந்து முறைப்படி இருவருக்கும் அந்த இடத்திலேயே திருமணம் செய்து வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பிலும் புகார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு சட்டப்படி வாழ உரிமை உண்டு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் இந்த அதிரடி திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.