சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியம் பாகிஸ்தான் நாய்களை மிரட்ட சிறுத்தை சிறுநீரை பயன்படுத்திய இந்திய ராணுவம்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியம் பாகிஸ்தான் நாய்களை மிரட்ட சிறுத்தை சிறுநீரை பயன்படுத்திய இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் நடத்திய 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த ஒரு வியக்கத்தக்க தகவலை முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர நிம்போர்கர் பகிர்ந்துள்ளார். எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் 15 கி.மீ ஊடுருவும்போது, அங்குள்ள தெருநாய்கள் குரைத்து எதிரிகளை எச்சரிக்காமல் இருக்க சிறுத்தையின் மலம் மற்றும் சிறுநீரை இந்திய வீரர்கள் பயன்படுத்தினர். சிறுத்தையின் வாசனை வந்தால் நாய்கள் பயந்து ஓடிவிடும் என்ற விலங்கு நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இதனால் நாய்கள் சத்தமிடாமல் அமைதியாக இருந்ததால், ராணுவம் தனது இலக்கை ரகசியமாக அடைய முடிந்தது.

உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமார் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய உளவு அமைப்புகளான ‘ரா’ மற்றும் ராணுவப் புலனாய்வுத் துறையின் துல்லியமான கண்காணிப்பின் கீழ் இந்த ஆபரேஷன் நடைபெற்றது. வீரர்களுக்குக் கூட கடைசி நேரத்தில்தான் இலக்கு பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டன. சிறுத்தை சிறுநீரைப் பயன்படுத்தி நாய்களை ஏமாற்றிய இந்த தனித்துவமான உத்தி, இந்திய ராணுவத்தின் புத்திசாலித்தனமான திட்டமிடலுக்குச் சான்றாக அமைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *