இரண்டு திருமணங்கள் செய்யாவிட்டால் ஆயுள் தண்டனை விதிக்கும் விசித்திர நாடு
December 29, 2025

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்ரியா நாட்டில் ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற விசித்திரமான சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்ய மறுத்தால், அவருக்கு கடுமையான தண்டனையாக ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தனிப்பட்ட விருப்பம் எதுவாக இருந்தாலும், அந்நாட்டு சட்டத்திற்கு ஆண்கள் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்.
எரித்ரியா மற்றும் எத்தியோப்பியா இடையே நிலவிய உள்நாட்டுப் போரின் காரணமாக, அந்நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மக்கள் தொகை சமநிலையை பராமரிக்கவே இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், கணவனின் இரண்டாவது திருமணத்தை தடுக்கும் மனைவிகளுக்கும் அந்நாட்டு அரசு சிறை தண்டனை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.