இந்திய சந்தையில் டொயோட்டா அதிரடி சாதனை ஒரே ஆண்டில் ۳.۸۸ லட்சம் கார்கள் விற்பனை

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,88,801 வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 19% வளர்ச்சியாகும். குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் மட்டும் 39,333 வாகனங்கள் விற்பனையாகி 33% உயர்வை பதிவு செய்துள்ளது. இன்னோவா ஹைக்ராஸ், பார்ச்சூனர் மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற எஸ்யூவி மற்றும் எம்பிவி மாடல்களின் அபரிமிதமான தேவையே இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
விற்பனையுடன் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கிளான்சா மற்றும் ஹைரைடர் உள்ளிட்ட மாடல்களில் 6 ஏர்பேக்குகளை டொயோட்டா தரப்படுத்தியுள்ளது. மேலும், இன்னோவா ஹைக்ராஸ் பாரத் என்சிஏபி (Bharat NCAP) சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவை நெட்வொர்க் மூலம் 2026 ஆம் ஆண்டிலும் இந்த வளர்ச்சியைத் தொடர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.