EMI குறையவில்லை, சரிந்தது பங்குச்சந்தை! வங்கி வாடிக்கையாளர்களுக்கு RBI-யின் அதிரடி அறிவிப்பு என்ன?
February 6, 2026

இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாகவே நிலைநிறுத்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான இஎம்ஐ (EMI) குறையும் என எதிர்பார்த்த சாமானிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது, சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், வங்கி மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய விதிகளை ஆர்பிஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, பணப் பரிமாற்ற மோசடிகளில் வாடிக்கையாளர்கள் இழப்பீடு பெற வழிவகை செய்யப்படும். தவறான நிதி தயாரிப்புகளை விற்பனை செய்வது மற்றும் கடன் வசூலிப்பு முறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.