ரஷ்ய எண்ணெய்க்கு உலகளவில் திடீர் கிராக்கி மற்றும் நாளொன்றுக்கு 1400 கோடி ரூபாய் வருமானம்

ரஷ்ய எண்ணெய்க்கு உலகளவில் திடீர் கிராக்கி மற்றும் நாளொன்றுக்கு 1400 கோடி ரூபாய் வருமானம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் எதிர்ப்பு போரினால் சர்வதேச சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு எதிர்பாராத தேவை ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை சிக்கலால் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யா தற்போது நாளொன்றுக்கு 150 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது. இந்த பெரும் தொகையை உக்ரைன் போருக்கான நிதி ஆதாரமாக புடின் பயன்படுத்துவதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போரினால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டாலும், ரஷ்யா மட்டுமே அதிக லாபம் பெறும் நாடாக மாறியுள்ளது. முன்பு இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கிய ரஷ்யா, தற்போது சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ரஷ்யாவின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் தற்போது வலுப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *