பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரின் அமைதி முயற்சியை பாராட்டி தள்ளிய சசி தரூர்

பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரின் அமைதி முயற்சியை பாராட்டி தள்ளிய சசி தரூர்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பிரதமர் மோடியும் அமைச்சர் ஜெய்சங்கரும் ஈரான் அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். உலக நன்மைக்காக இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், அமைதிக்கான குரல் கொடுப்பதில் இந்தியா முதன்மையாகத் திகழ்வது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தரும் காந்தியும் பிறந்த இந்திய மண்ணின் அகிம்சை மரபைப் போற்றினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு மோதல்களுக்கு இடையே, அமைதிப் பாதையில் இந்தியா உறுதியாக நிற்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *