கனடா குடியுரிமை கொண்ட சிறுமியை மீண்டும் அந்நாட்டிற்கே அனுப்ப கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
March 11, 2026

கனடாவில் வசிக்கும் தந்தை தொடர்ந்த வழக்கில், ஐந்து வயது சிறுமியை மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்ப கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் விசா காலம் முடிவடைந்ததாலும் அவர் கனடா குடிமகள் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி தாயார் குழந்தையை இந்தியா அழைத்து வந்ததாக தந்தை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சிறுமி கனடா செல்லும் வரை தினமும் தனது தந்தையுடன் வீடியோ காலில் பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உரையாடலின் போது தாயார் அல்லது உறவினர்கள் அருகில் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தாயாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.