கெட்ட வார்த்தை பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கும் மகாராஷ்டிர கிராமத்தின் அதிரடி முடிவு

கெட்ட வார்த்தை பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கும் மகாராஷ்டிர கிராமத்தின் அதிரடி முடிவு

மகாராஷ்டிராவின் கோல்கான் கிராம பஞ்சாயத்து நாகரீகமான பேச்சுவழக்கை உறுதி செய்ய ஒரு வினோதமான விதியை அமல்படுத்தியுள்ளது. இனி கிராம எல்லைக்குள் பெண்களை அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசினால், சம்பந்தப்பட்ட நபருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிராமத்தைச் சேர்ந்த பூஜா ஜகதாப் என்பவரின் ஆலோசனையின் பேரில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதியைப் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, பஞ்சாயத்து ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கெட்ட வார்த்தை பேசியதற்கான வீடியோ அல்லது ஆடியோ ஆதாரத்தை புகார்தாரர் சமர்ப்பிக்க வேண்டும். சுமார் 9,000 மக்கள் வசிக்கும் இந்த விவசாயக் கிராமம், பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுத்து சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *