சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க மோடி அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் நாட்டில் அமலானது இசிஏ சட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க மோடி அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் நாட்டில் அமலானது இசிஏ சட்டம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசு உடனடியாக ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை’ (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு தடையின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்ற பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை விட எல்பிஜி உற்பத்திக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள ஹைட்ரோகார்பன் ஓட்டங்களை மற்ற பயன்பாடுகளுக்கு மாற்றாமல் நேரடியாக சமையல் எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர்ச் சூழலிலும் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க விநியோகத்தை சீராக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *