நீதித்துறை பற்றிய சர்ச்சை கருத்துக்காக என்சிஇஆர்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது

நீதித்துறை பற்றிய சர்ச்சை கருத்துக்காக என்சிஇஆர்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக என்சிஇஆர்டி உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரித்த நீதிமன்றம், இது நீதித்துறைக்கு எதிரான சதி என்று கடும் கண்டனம் தெரிவித்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு அந்தப் புத்தகத்தை வெளியிடவும் விநியோகிக்கவும் தடை விதித்துள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட பாடப்புத்தகங்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் இனி விற்பனை செய்யப்படாது என்றும் என்சிஇஆர்டி தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *