பெண் தோழியை அறையில் பூட்டி வைத்து சித்திரவதை! கைதான பிரபல இன்ஃப்ளூயன்சர் ஷமீக் பரபரப்பு வாக்குமூலம்!
February 6, 2026

பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஷமீக் (Nonsane), தனது பெண் தோழியை 12 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியதாக பெஹாலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷமீக், அலிபூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, “தான் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக” கூச்சலிட்டார். சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.