ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரியை மாற்ற இனி அலைய வேண்டாம் மொபைல் ஆப் போதும்
January 2, 2026

ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணை மாற்ற இனி சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய ஆதார் செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து மாற்றங்களையும் எளிதாகச் செய்துகொள்ள முடியும். இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஓடிபி அல்லது முக அங்கீகாரம் மூலம் உள்நுழைந்து தங்களின் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
செயலியில் உள்ள ‘ஆதார் ஆன்லைன் அப்டேட்’ விருப்பத்தைத் தேர்வு செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி கட்டணத்தைச் செலுத்தினால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணிக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்த எளிய நடைமுறை பொதுமக்களின் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த தீர்வாகும்.