நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து காதலிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் குடும்பத்தினரை தாக்கிய கொடூரம்

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து காதலிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் குடும்பத்தினரை தாக்கிய கொடூரம்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, ஒருதலைப்பட்சமாக காதலிப்பதாகக் கூறி வாலிபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். அந்த இளைஞன் நீண்ட நாட்களாக இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததோடு, கட்டாயத் திருமணம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பருடன் வந்த அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதை தடுத்த இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *