ரஷ்யாவில் 1.5 லட்சம் சம்பளத்தில் இந்தியர்களுக்கு குவியும் வேலைவாய்ப்புகள்

உக்ரைன் போர் மற்றும் மக்கள் தொகை குறைவு காரணமாக ரஷ்யாவில் கடும் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பணி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்தியப் பணியாளர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரஷ்யா செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்கு பணிபுரிபவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள இந்தியப் பணியாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை ரஷ்ய நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. வெல்டர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு இங்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் விண்ணப்பிப்பதும், முறையான பணி விசா பெறுவதும் அவசியமாகும். 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 72,000 இந்தியர்களுக்கு ரஷ்யா பணி அனுமதி வழங்கியுள்ளது, இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.