பீஷ்ம அஷ்டமி 2026 முன்னோர்களின் ஆசி பெற ஏகோதிஷ்ட ஸ்ராத்தம் செய்ய வேண்டிய சரியான நேரம் இதோ

இந்து தர்மத்தில் மாசி மாதம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கங்கை நதியில் நீராடி சிவபெருமானையும் கங்கையையும் வழிபடுவது விசேஷமானது. குறிப்பாக, மாசி மாத சுக்ல பட்ச அஷ்டமி திதி அன்று ‘ஏகோதிஷ்ட ஸ்ராத்தம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் தனது உடலை நீத்த இந்த நாளில், அவருக்கு பாண்டவர்கள் ஸ்ராத்தம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. தந்தை மற்றும் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் அருளைப் பெறவும் இந்த வழிபாடு அவசியமானதாகக் கருதப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இரவு 11:10 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி, ஜனவரி 26 ஆம் தேதி இரவு 9:17 மணிக்கு நிறைவடைகிறது. உதய திதி அடிப்படையில், ஜனவரி 26 அன்று பீஷ்ம அஷ்டமி கொண்டாடப்படும். அன்றைய தினம் ஏகோதிஷ்ட ஸ்ராத்தம் செய்வதற்கான சுப முகூர்த்தம் காலை 11:29 மணிக்கு தொடங்கி மதியம் 1:38 மணி வரை நீடிக்கும். இந்த புண்ணிய காலத்தில் தர்ப்பணம் செய்வது குடும்பத்திற்கு சுபிட்சத்தையும் முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.