கையில் பணம் தங்கவில்லையா வாஸ்து சாஸ்திரம் கூறும் இந்த எளிய மாற்றங்கள் உங்கள் செல்வத்தை பெருக்கும்

அதிகம் உழைத்தும் கையில் பணம் தங்காமல் போவதற்கு வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் காரணமாக இருக்கலாம். வீட்டின் நுழைவாயில் வழியாகவே செல்வம் உள்ளே வருவதால், அதனை எப்போதும் சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வைத்திருக்க வேண்டும். வாசலில் சுவஸ்திக் அல்லது ‘சுப-லாபம்’ சின்னங்களை வரைவது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். நுழைவாயில் அசுத்தமாகவோ அல்லது இருட்டாகவோ இருந்தால் அது தேவையற்ற பண இழப்புகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
பணம் வைக்கும் பீரோ அல்லது பெட்டியை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து, அதன் முகம் வடக்கு நோக்கி இருக்குமாறு அமைப்பது குபேரரின் அருளைப் பெற்றுத்தரும். சமையலறையில் அடுப்பும் தண்ணீரும் அருகருகே இருப்பதைத் தவிர்ப்பதுடன், வீட்டில் ஓடாத கடிகாரங்கள் அல்லது உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது. இந்த சிறிய மாற்றங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் நிலைக்கச் செய்யும்.