மீண்டும் போர் மூளுமா இந்தியா மீது பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கடும் எச்சரிக்கை

மீண்டும் போர் மூளுமா இந்தியா மீது பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கடும் எச்சரிக்கை

மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் நினைவு தினத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இந்தியாவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மே மாதம் நடந்த மோதலின் போது இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் அப்போது காட்டிய பொறுமைக்காக இந்தியா நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும், நினைத்திருந்தால் இன்னும் அதிகமான இந்திய போர் விமானங்களை வீழ்த்தியிருக்க முடியும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அமைதியை விரும்பினாலும் மீண்டும் ஒரு போர் திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள தங்கள் நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என்று சர்தாரி கூறினார். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இந்த பேச்சு புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *