இரகசியமாக டெல்லி சென்றார் லாலு பிரசாத் மீண்டும் கைகொடுத்த மகள்
December 18, 2025

கண் பாதிப்பு காரணமாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக ரகசியமாக டெல்லி சென்றுள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் பார்வை மங்கலாகத் தெரிந்ததையடுத்து, பாட்னா மருத்துவர்கள் அவரை டெல்லிக்கு பரிந்துரைத்தனர். கட்சித் தொண்டர்களின் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது.
தற்போது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கியுள்ள லாலு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேஜஸ்வி யாதவ் வெளிநாட்டில் இருந்தாலும், தொலைபேசி மூலம் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார். கடினமான காலங்களில் மீண்டும் ஒருமுறை மகளின் அரவணைப்பே லாலு பிரசாத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.