குழந்தைகளின் மூளையை செயலிழக்கச் செய்யும் ஸ்மார்ட்போன் ஆபத்து
December 17, 2025

சிறுவயதில் அதிகப்படியான மொபைல் பயன்பாடு குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது டிஜிட்டல் போதை பழக்கத்தை உருவாக்கி, நிஜ வாழ்க்கை செயல்பாடுகள் மற்றும் படிப்பின் மீதான ஆர்வத்தை முற்றிலுமாக குறைத்துவிடுகிறது.
திரை நேரம் அதிகரிப்பதால் குழந்தைகளின் கவனிப்புத் திறன் மற்றும் நினைவாற்றல் குறைகிறது. மேலும், மொபைல் திரையில் இருந்து வரும் நீல ஒளி தூக்கத்தை பாதிப்பதோடு, மற்றவர்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் சிக்கல்களை உண்டாக்கி அவர்களின் சமூகத் திறன்களை சிதைக்கிறது.