மூடுபனியால் விமான சேவைகள் பாதிப்பு பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் முக்கிய அறிவுறுத்தல்
December 17, 2025

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் நிலவும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புதன்கிழமை காலை விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்படலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைவான பார்வைத்திறன் காரணமாக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் புறப்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் வசதிக்காக கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்களின் விமான நேரத்தை உறுதிப்படுத்த இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.