2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் பிரம்மாண்ட திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா
March 9, 2026

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் ‘ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திமுக பிரம்மாண்ட மாநாட்டை நடத்துகிறது. சிறுகனூரில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 லட்சம் பேர் அமரும் வசதியுடன் அடிப்படை வசதிகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
மாலை 5.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி உரையாற்றுகிறார். 2021 தேர்தலில் வெற்றியைத் தந்த அதே இடத்தில் இந்த மாநாடு நடப்பதால், இது திமுகவின் தேர்தல் பணிகளுக்கான முக்கிய தொடக்கமாகக் கருதப்படுகிறது. இந்த மேடையில் பொதுமக்களைக் கவரும் வகையில் முதல்வர் முக்கிய அரசியல் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.