ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மாணவன் சாய் கார்த்திக் சாதனை

ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மாணவன் சாய் கார்த்திக் சாதனை

சென்னையைச் சேர்ந்த மாணவன் சாய் கார்த்திக் விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையிலும் தனது விடாமுயற்சியால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொண்டார். மாடியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட பலத்த காயத்தையும் பொருட்படுத்தாமல், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மடிப்பக்கம் தேர்வு மையத்திற்கு வருகை தந்தார்.

எழுத முடியாத சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு அனுமதியுடன் ஆசிரியர் ஒருவரின் உதவியை அவர் நாடினார். தேர்வு அறையில் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சாய் கார்த்திக் விடைகளைச் சொல்ல, அதனை ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார். உடல் வலியைத் தாண்டி இந்த மாணவன் காட்டிய தன்னம்பிக்கை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *