யூடியூப் மூலம் ஏடிஎம் குளோனிங் கற்றுக் கொண்ட கும்பல் கைது அதிர்ச்சியூட்டும் பின்னணி

யூடியூப் மூலம் ஏடிஎம் குளோனிங் கற்றுக் கொண்ட கும்பல் கைது அதிர்ச்சியூட்டும் பின்னணி

யூடியூப் பார்த்து ஏடிஎம் கார்டுகளை குளோனிங் செய்து பணத்தைத் திருடிய ஹரியானாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை உத்திரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இரவு 12 மணிக்கு மேல் பணத்தை எடுத்து வந்தனர், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறுஞ்செய்திகளைக் கவனிக்க முடியாமல் போனது. இவர்களிடமிருந்து 14 ஏடிஎம் கார்டுகள், ஸ்வைப் மெஷின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த கும்பல் மொபைல் ஆப் மற்றும் புளூடூத் கருவிகள் மூலம் கார்டுகளை குளோனிங் செய்து வந்தனர். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வாடகை கார்களைப் பயன்படுத்தியதோடு, அடிக்கடி அதன் எண்களையும் மாற்றியுள்ளனர். உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இவர்கள் பலரிடம் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *