மைக்ரோசாப்ட் வேலையை விட்டுவிட்டு இந்திய தத்துவங்களை போதிக்கும் ஜப்பானிய பெண் பகவத் கீதையால் மாறிய வியக்கத்தக்க வாழ்க்கை

மைக்ரோசாப்ட் வேலையை விட்டுவிட்டு இந்திய தத்துவங்களை போதிக்கும் ஜப்பானிய பெண் பகவத் கீதையால் மாறிய வியக்கத்தக்க வாழ்க்கை

மைக்ரோசாப்ட் மற்றும் புஜி போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய ஜப்பானைச் சேர்ந்த ரிகோ வாதாபே இன்று பகவத் கீதை மற்றும் இந்திய தத்துவங்களை உலகிற்கு போதித்து வருகிறார். டோக்கியோ ரயில் நிலையத்தில் ஒரு அந்நியர் வழங்கிய ஜப்பானிய மொழி பகவத் கீதை அவரது சிந்தனையை முழுமையாக மாற்றியது. கீதையைப் படித்த மூன்றே நாட்களில் அவர் இந்தியா வந்து குருக்ஷேத்திரத்தில் அதுகுறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.

தற்போது ஜப்பானில் யோகா மையங்கள் மூலம் கீதை, வேதம் மற்றும் ராமாயணத்தின் சாரங்களை ரிகோ போதித்து வருகிறார். இந்தியரான முகேஷை திருமணம் செய்து கொண்ட இவர் தனது மகனுக்கு அர்ஜுன் என்று பெயரிட்டுள்ளார். தனது உயரிய பதவியை துறந்துவிட்டு இந்திய ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றால் ஜப்பானிய மக்களுக்கு சனாதன தர்மத்தின் மேன்மையை விளக்கி வருகிறார். இந்திய கலாச்சாரம் தனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை வழங்கியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *