முதியோர் இல்ல அதிகாரியை கட்டிப்பிடித்த தந்தை, மகன் கண்ட அதிர்ச்சி தரும் உண்மை
February 1, 2026

மனைவியின் வற்புறுத்தலால் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தான் ஒரு மகன். பண்டிகை காலங்களில் கூட அவர் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்ல மீண்டும் இல்லத்திற்கு சென்றபோது, அங்குள்ள அதிகாரி தன் தந்தையை கட்டிப்பிடித்து மகிழ்வதை கண்டு வியந்தான். அவர்களின் நெருக்கத்திற்கான காரணத்தை அதிகாரிடம் கேட்டபோது ஒரு கசப்பான உண்மை வெளிப்பட்டது.
அந்த அதிகாரி, தனக்கு அவரை 30 ஆண்டுகளாகத் தெரியும் என்றும், 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இல்லத்திலிருந்துதான் அவர் ஒரு குழந்தையை தத்தெடுத்தார் என்றும் கூறினார். அந்த குழந்தை தான் தான் என்பதை உணர்ந்த மகன் நிலைகுலைந்து போனான். தன் மீது அன்பு காட்டி வளர்த்த தந்தையை கைவிட நினைத்ததை எண்ணி வருந்தியவன், உடனடியாக மன்னிப்பு கேட்டு தன் தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.