மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 66 சதவீதம் வரை அதிரடி உயர்வு கிடைக்க வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 66 சதவீதம் வரை அதிரடி உயர்வு கிடைக்க வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவில் தசாப்த கால பழைய ஊதியக் கணக்கீட்டு முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. தற்போதுள்ள மூன்று குடும்ப உறுப்பினர்கள் என்ற முறைக்கு பதிலாக ஐந்து உறுப்பினர்களைக் கணக்கில் கொண்டு ஊதியத்தை நிர்ணயிக்க ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த புதிய முறை அமலுக்கு வந்தால் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் சுமார் 66 சதவீதம் வரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

நிபுணர்களின் கணிப்புப்படி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பிட்மென்ட் ஃபேக்டர் 1.76-லிருந்து 2.42-ஆக உயரக்கூடும். இதன் மூலம் தற்போது 78,800 ரூபாயாக உள்ள அடிப்படை ஊதியம் சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஊதியக் கட்டமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக அரசு மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு இடையே தற்போது தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *