பீகாரில் தோல்வி; கேரள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி: 2025 காங்கிரஸ் கட்சியின் லக்கி ஆண்டா?
தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல காலம் வரப்போகிறதா? கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குப் பிறகு அரசியல் வட்டாரங்களில் இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்பட்டது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸுக்கு இந்த வெற்றி ஒரு பெரிய ஆறுதல் செய்தியாகும். மக்களவைத் தேர்தலில் 99 இடங்களைப் பெற்று ஓரளவு மீண்டெழுந்த போதிலும், அதன் பிறகு ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் கட்சி மோசமாகத் தோற்றது. இருப்பினும், கேரளாவில் இந்த வலுவான நிலையைப் பெற்றதன் மூலம், காங்கிரஸ் இப்போது மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாமில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் புதிய நம்பிக்கையுடன் உள்ளது.