பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபி பிஏபிஎஸ் ஹிந்து கோவில் தற்காலிகமாக மூடல்

பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபி பிஏபிஎஸ் ஹிந்து கோவில் தற்காலிகமாக மூடல்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பிஏபிஎஸ் ஹிந்து கோவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வழக்கமான பூஜைகள் மற்றும் மத சடங்குகள் தடையின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடங்கிய மோதல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் இப்பகுதி முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர் சூழல் சீராகும் வரை மறு உத்தரவு வரும் வரை இந்த தற்காலிக மூடல் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *