நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் என்ஆர்ஐகளுக்கு வரி விலக்கு அறிவிப்பு
February 1, 2026

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2047 ஆம் ஆண்டு வரை வரி விடுமுறை (Tax Holiday) குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய நிறுவனங்களுக்குச் சேவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இதன் மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் (NRI) இந்த பட்ஜெட்டில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு மூலதனப் பொருட்களை வழங்கும் என்ஆர்ஐகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த அதிரடி முடிவு நாட்டின் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.