நள்ளிரவில் தோவல் மற்றும் சௌஹானுடன் ஜெய்சங்கர் நடத்திய அவசர ஆலோசனை பெரும் பரபரப்பு

நள்ளிரவில் தோவல் மற்றும் சௌஹானுடன் ஜெய்சங்கர் நடத்திய அவசர ஆலோசனை பெரும் பரபரப்பு

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படை தளபதி அனில் சௌஹானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை நடத்தினார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு மத்தியில் இந்தியாவின் கடல்சார் வணிகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதே இந்த உயர்மட்டக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை மீட்பதற்கான திட்டங்கள் குறித்து இந்த மூடிய கதவு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. போரினால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கவும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளவும் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *